மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஆசிரியர் சண்முகநாதனை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டார்

Update: 2021-09-23 10:31 GMT

பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ஆசிரியர் சண்முகநாதனை போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் 

புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதன் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்து மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் வைக்க  மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதன், பள்ளி மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக  சண்முகநாதன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  இன்று காலை அவர் தனக்கு நெஞ்சுவலி என்று கூறியதை தொடர்ந்து அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் சண்முகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை திருமயம் கிளைச் சிறையில் வைக்க  நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

Tags:    

Similar News