சாந்தநாதசுவாமி கோவிலில் சோலார் மின்சாரம்: அமைச்சர் தொடக்கம்

கோவிலில் சோலார் பிளாண்ட் போட்டது மூலமாக கோவிலுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் மீதமாகும்

Update: 2021-09-26 16:39 GMT

புதுக்கோட்டையில் புகழ் பெற்ற சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்  சூரியசக்தி  மூலமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.இக்கோயிலில் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் முழுவதுமாக இந்த கோயிலில் சோலார் பிளான்ட் மூலமாக விளக்குகள் எரிவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.



இந்த முடிவை ஏற்று உபயதாரர்கள் மூலமாக ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 2 கிலோ வாட் 2 சோலார் பிளான்ட் கள் கோவிலின் மேல் தளத்தில் போடப்பட்டது. இந்த சோலார் பிளான்ட் மூலமாக 60 விளக்குகள் எரிய வைக்க முடியும். இந்த சோலார் மூலமாக கோவிலுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார். கோவிலில் சோலார் பிளாண்ட் போட்டது மூலமாக கோவிலுக்கு  மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News