மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மழை காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-11-25 01:45 GMT

ஆட்சியர் கவிதா ராமு.

டெல்டா மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல்,  லேசான சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து இரவு முழுவதும் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று  விடியற்காலை கருமேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று  விடுமுறை என,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் இன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News