ராஜீவ்காந்தி நினைவு நாள்: புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை

புதுக்கோட்டையில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-05-21 05:12 GMT

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் மறைந்த ராஜிவ்காந்தி தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பில் பலியானதை அடுத்து அவருடைய நினைவு தினத்தை ஒவ்வோராண்டும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி இன்று புதுக்கோட்டை சாந்தநாத புரம்பகுயில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் முப்பத்தி ஒன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பயங்கரவாத எதிர்ப்பு நாளாக காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். மேலும் இந்த நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் முன்னாள் நகரமன்ற தலைவர் துரை திவ்யநாதன் ,வழக்கறிஞர் சந்திரசேகரன், தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பென்னட் அந்தோணி ராஜ், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் வீர துரைசிங்கம், உள்ளிட்ட நிர்வாகிகள் சூர்யாபழனியப்பன், மணி ஆறுமுகம், மதன், சரவணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News