புதுக்கோட்டை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கபட்டது.

Update: 2022-01-15 03:35 GMT

பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்.

தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி தற்போது பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிவேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கபட்டது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திலக்ராஜ், சங்க துணை தலைவர் இப்ராஹீம் பாபு, செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் பிரசாத், துணைச் செயலாளர் ராஜாமுகமது, இணைச் செயலாளர் ராஜா முகமது, உடற்பயிற்சி ஆசிரியர் முத்துராமலிங்கம், மற்றும் நகர போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News