துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர்

துப்புரவு பணியாளர்களுக்கு குளிர்பானங்கள் உணவு வழங்குவது என பல்வேறு பணிகளை துணைத்தலைவர் செய்து வருகிறார்

Update: 2022-05-14 09:28 GMT

புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி

 புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும்  மாஸ் கிளீனிங் முறையை நகர்மன்ற தலைவர் செந்தில் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி ஆகியோர் சனிக்கிவமை துவக்கி வைத்தனர்  இன்று ஒரு நாள் முழுவதும் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாக்கடை அடைப்பை சரிசெய்வது குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாஸ் கிளினிங் என்ற அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் சனிக்கிழமை  புதுக்கோட்டை நகராட்சி முழுவதும் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.  இதனை அறிந்த புதுக்கோட்டை நகர மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணி மேற்கொண்டு வரும் இடங்களுக்கு சென்று துப்புரவு பணிகளை பார்வையிட்டு மேலும் துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உணவை வழங்கி  மகிழ்வித்தார். உணவு வழங்கிய நகர்மன்றத் துணைத் தலைவருக்கு . துப்புரவு பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.  இதுபோன்று துப்புரவு பணியாளர்களுக்கு வெயிலின் தாக்கத்தில் தற்காத்துக்கொள்ள குளிர்பானங்கள் வழங்குவது உணவு வழங்குவது என பல்வேறு பணிகளை நகர்மன்ற துணைத்தலைவர் செய்து வருகிறார்.

Tags:    

Similar News