பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய பொறியாளர் சங்கத்தினர்

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பொதுமக்களுக்கு வேப்பமரம், புங்க மரம், அரசமரம், பலாமரம் ஆகிய நாட்டு மரங்கள் வழங்கப்பட்டது

Update: 2021-09-15 08:41 GMT

பொறியாளர் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய பொறியாளர் சங்கத்தினர்.

பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொறியாளர் சங்கத்தினர்  பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

புதுக்கோட்டை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் பொறியாளர் தின விழா மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை, அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ரவி தலைமை வகித்தார். இதில்,  பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் சென்றவர்களுக்கு வேப்பமரம், புங்க மரம், அரசமரம், பலாமரம், உள்ளிட்ட நாட்டு   மரக்கன்றுகளை வழங்கினர்.  நிகழ்ச்சியில், பொருளாளர் ஆறுமுகம் மற்றும்  செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News