புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக கவிதா ராமு நியமனம்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக கவிதா ராமுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய வந்த உமா மகேஸ்வரி தற்போது மாற்றப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கெரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கெரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தற்போது இரண்டு வாரங்களாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துவரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது