தடுப்பூசி சிறப்பு முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-09-26 11:24 GMT

புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் சாமி  சத்தியமூர்த்தி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்தாலும் பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

அதன் படி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இன்று புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, விஸ்வகர்மா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் வாகவாசல் பஞ்சாயத்தில் உள்ள ராஜா பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி .சத்தியமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் குரு .மாரிமுத்து வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News