புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகள் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை நகர் கிளை பா.ஜ.க. சார்பாக டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-13 11:23 GMT

புதுக்கோட்டை பா.ஜ.க நகர் கிளையின் சார்பாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 புதுக்கோட்டை நகர் கிளைத்தலைவர் முத்துலட்சுமிதலைமையில், மதுக்கடைகளை திறக்க வேண்டாம்என தமிழக அரசை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வீடுகளின் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி கணேசன், நகரத் தலைவர் சுப்பிரமணியன்,நகரப் பொது செயலாளர் லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர துணைத்தலைவர் இளங்கோ,நகர செயலாளர் சிங்காரம்,சக்திகேந்திர பொறுப்பாளர்கள் ராஜகுமாரி,சங்கீதா,நிர்வாகிகள்,கேபி ஆறுமுகம்,அம்சவள்ளி,லெட்சுமணராஜா,விக்னேஷ்,ராஜா ,

மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுக்கடை திறக்க கூடாது என்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசு மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News