புதுக்கோட்டையில் விற்பனைக்காக குவிந்துள்ள அன்னாசி பழங்கள்

புதுக்கோட்டையில் விற்பனைக்காக கேரளாவிலிருந்து அன்னாசி பழங்கள் வரத்தொடங்கியுள்ளன.

Update: 2021-07-24 09:58 GMT

விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாச்சி பழங்கள்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் வெயிலின் தாக்கத்தை போக்கிக்கொள்ள இளநீர், தர்பூசணி பழங்கள், கரும்பு ஜூஸ், உள்ளிட்டவைகளை வாங்கி அருந்துகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளியூர்களிலிருந்து பல்வேறு வகையான பழங்கள் தற்போது புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செல்லும் சாலை ஓரத்தில் கேரளாவிலிருந்து விற்பனைக்காக அண்ணாச்சி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 3 கிலோ அண்ணாச்சி பழத்தின் விலை 100 ரூபாய் என தற்போது வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். அதனை ஆர்வத்துடன் பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News