டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

இடையாத்தி மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-02 16:00 GMT

இடையாத்தி மங்கலத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு.

அறந்தாங்கி அடுத்த இடையாத்தி மங்களத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு அருகில் பள்ளிக்கூடம்,  கோவில்களும் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் அவ்வழியாக செல்வதற்கு அச்சபடுகின்றனர்.

எனவே இடையாத்தி மங்கலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இடையாத்தி மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இடையாத்தி மங்கலத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தனர்.

Tags:    

Similar News