உக்ரைனில் படிக்கச் சென்ற மகனை மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் பெற்றோர் மனு

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகனை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாணவரின் பெற்றோர் மனு கொடுத்தனர்.

Update: 2022-02-26 11:43 GMT

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற தனது மகனை மீட்டுத்தருமாறு புதுக்கோட்டை மாவட்டம் ஓடப்ப விதியை, சேர்ந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலிருந்து உக்ரைனுக்குகு மருத்துவம் படிக்கச் சென்ற தனது மகளை மீட்டுத்தருமாறு  மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஓடப்பவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மற்றும் ஆனந்தி தம்பதிரின் மகன் அஜித் ராஜ். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளார். தற்போது முதலாம் ஆண்டு அங்கு படித்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் தனது மகன் அங்கு சாப்பாடு இல்லாமல் சிக்கி தவித்து வருவதாகவும் உயிருக்கு பயந்து பதுங்குகுழியில் அவனும் அவனது நண்பர்களும் இருப்பதாகவும் உடனடியாக தனது மகனை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அஜித்ராஜின் பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News