கால்களை இழந்தவருக்கு கைகொடுத்த நல்ல உள்ளங்கள்

புதுக்கோட்டை அருகே கால்களை இழந்து வறுமையால் வாடியவருக்கு பெட்டிக்கடை அமைத்து கொடுத்த நல்ல உள்ளங்கள்.

Update: 2021-03-21 13:41 GMT

புதுக்கோட்டை அருகே மேலவிடுதி கிராமத்தில் வசிப்பவர் ராஜா. இவர் தனது இரண்டு கால்களையும் இழந்ததால் மனைவி கைக்குழந்தையோடு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதனை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்த சென்னை நாடார் மகாஜனா சபை தலைவர் கார்த்திக் நாடார், ஆலங்குடி ரெட்கிராஸ் செயலாளர் முருகன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவருக்கு உதவும் நோக்கத்தோடு சுமார் ரூபாய் 60,000 செலவில் பெட்டிக்கடை மற்றும் வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை அளித்து வியாபாரத்தை இன்று துவக்கி வைத்தனர்.  

நிகழ்ச்சியில் ஆலங்குடி வியாபாரிகள் சங்க பேரவை பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் சென்னை கார்த்திக் நாடார் தலைமையில் இதுபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் PMP.துரை என்பவர் பத்திரிக்கை செய்தியை படித்து உதவி செய்ய முன்வந்தார். மேலும் மருத்துவர் குரு.மாரிமுத்து, மருத்துவர் துரை நாகரத்தினம், T.அருண் ஆகியோர் உதவி புரிந்துள்ளனர். 

இந்தக் கடை மூலம் அவரது குடும்பம் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று அனைவரும் வாழ்த்தினார்கள்


Tags:    

Similar News