சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர்

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் டாக்டர் ரமேஷ் சிடி ஸ்கேன் மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

Update: 2021-09-16 05:24 GMT

டாக்டர் ரமேஷ் சிடி ஸ்கேன் மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் இயங்கி வரும் பி வெல் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் ரமேஷ் சிடி ஸ்கேன் மையத்தை இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, கந்தரோடை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மற்றும் மருத்துவர் ரமேஷ், மருத்துவர் சண்முகசுந்தரம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முல்லை முபாரக், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் காதர்கணி, முன்னாள் தக்கர் வைரவன், வழக்கறிஞர் கோவிந்தசாமி, சத்திய ரவி, அரசர், காசி இளங்கோ உள்ளிட்ட அனைத்து மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News