ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க கொடியினை ஏற்றிவைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்

Update: 2022-03-02 13:59 GMT

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க கொடியினை ஏற்றிவைத்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க கொடியினை ஏற்றிவைத்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தொழில் சங்க பலகை திறப்பு விழா மற்றும் தொழிற் சங்க கொடியேற்று விழா  திமுக நகர செயலாளர் நைனா முகமது தலைமையில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு தொழிற்சங்க பலகை மற்றும் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தும், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News