புதுக்கோட்டை கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு சுவாமிதரிசனம் செய்ய அழைத்து வந்தனர்.

Update: 2021-08-31 02:05 GMT

புதுக்கோட்டை கிருஷ்ணர்கோயிலில் நடந்த ஜெயந்தி விழாவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர்

 புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 6 -ஆம் வீதியில்உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு, பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட சிறப்பு பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அர்ச்சனை தீபாராதனை நடந்தது. மாலையில் .சுவாமி சந்தகாப்பு மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில், அப்பகுதியிலுள்ள பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள், கிருஷ்ணர் ராதை வேடமிட்டு சுவாமிதரிசனம் செய்ய அழைத்து வந்தனர்.

Tags:    

Similar News