கவிநாடு கிழக்கு ஊராட்சியில் நிவாரண உதவி, அமைச்சர் வழங்கல்

புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

Update: 2021-06-13 16:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் அமைச்சர் ரகுபதி கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். அருகில் எம்எல்ஏ முத்துராஜா.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சி சார்பில் இன்று அப்பகுதியில் உள்ள ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஊராட்சி அலுவலகம் முன்பு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நகர கழக செயலாளர் நைனா முகமது, கவிநாடு கிழக்கு ஊராட்சி தலைவர் ரங்கம்மாள் பழனிச்சாமி, மற்றும் திமுக நிர்வாகிகள் எம்எம் பாலு ,வெற்றி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News