ஜெயலலிதா பல்கலைக்கழகம் கலைக்கப்படுவதைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத் துடன்இணைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-31 12:09 GMT

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கலைத்து விட்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்ததை கண்டித்தும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்தும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று சட்டசபையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கலைத்து விட்டு, அதனை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கான, சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத்தலைவர்  ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இந்நிலையில்,  அதிமுக எம்எல்ஏ-க்களை கைது செய்ததை கண்டித்தும்,  திமுக அரசு  பொய் வழக்குப் போடுவதை கண்டித்தும், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News