'3 ஆண்டில் தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்' -முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
‘3 ஆண்டில் தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்’ -என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பாக பேசினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு எண்ணிக்கையின் போது நடைபெற்ற பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் மீது காவல் துறையால் மேலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துவரும் தி.மு.க. அரசை கண்டித்தும் புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதில் விஜயபாஸ்கர் பேசுகையில்
தேர்தல் வாக்குறுதிகளை எதையுமே தி.மு.க. நிறைவேற்ற வில்லை.பழிவாங்கும் நோக்கில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது. அதனை அ.தி.மு.க. சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.
எவ்வளவு அச்சுறுத்தல்கள் வந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் களத்தில் நின்று வெற்றிகளை பெற்றுள்ளது.மூன்று ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலரும் என்றார்.