நீதிமன்றத்தில் வரதட்சணை பொருட்களை ஒப்படைத்த கணவர் வீட்டாரால் பரபரப்பு

நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணிடம், கணவர் வீட்டார் நகைகள் உள்ளிட்ட வரதட்சனை பொருட்களை ஒப்படைத்ததால் பரபரப்பு.

Update: 2021-07-26 15:45 GMT

கணவர் வீட்டாரின் மீது நடவடிக்கை எடுக்ககோரி நீதிமன்ற வாசலில் கண்ணீர் விட்டு கதறிய ரம்ஜான் பாத்திமா.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த இப்ராம்ஷா பர்சாத் என்பவருக்கும், ரம்ஜான் பாத்திமா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் தனது கணவர் இப்ராம்ஷா பர்சாத் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவரை தன்னோடு சேர்த்து வைக்குமாறு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக இன்று ரம்ஜான் பாத்திமா அவரது குடும்பத்தினருடன் வந்துள்ளார். அப்போது அவரது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரம்ஜான் பாத்திமாவுக்கு சீதனமாக கொடுத்த நகைகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஒரு வாடகை வாகனத்தில் அனுப்பி வைத்து, அதனை புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்த ரம்ஜான் பாத்திமாவிடம் ஒப்படைக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரம்ஜான் பாத்திமா தனது கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.


Tags:    

Similar News