புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது

மாணவி லாவண்யா சாவுக்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-21 15:06 GMT

புதுக்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வி.ஹெச்.பி. மற்றும் இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே  உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த லாவண்யா என்ற மாணவி நேற்று முன்தினம் இறந்தார்.  அந்த பள்ளியில் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அந்த பள்ளி மாணவி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் லாவண்யாவின் இறப்பிற்கு நீதி கேட்டும் அந்த தனியார் பள்ளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மதமாற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ,அவரது இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும், கட்டாய மத மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வி.ஹெச்.பி. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக லாவண்யாவின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News