புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

உயர் கல்வி மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது அந்த மாற்றத்திற்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்

Update: 2021-12-23 13:15 GMT

புதுக்கோட்டை மாநாடு சுதர்சன் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மேகலா மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

இவ்விழாவிற்குச் சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் ரமாசிங்கரம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மேகலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், உயர் கல்வி மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. அந்த மாற்றத்திற்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். உயர்ந்த லட்சியத்தோடு படித்தால்தான் இலக்கை அடைய முடியும், மாணவர்கள் பட்டம் பெறுவதோடு நின்றுவிடாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபாட வேண்டும் என்றார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News