வல்லத்திராக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

Update: 2022-01-19 03:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக் கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வல்லத்திராக்கோட்டையில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் கன்சல் பேகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளர் மணிமாறன் மேலாளர் பொன்னுச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News