புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

Update: 2022-03-19 08:16 GMT

புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

 புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் நியாஸ் பொதுமக்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை முன்னெடுத்து பல ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

மேலும் புதுக்கோட்டை நகர பகுதிகளில் எந்த ஒரு பொதுமக்கள் சார்ந்த பிரசனை என்றாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சேர்க்கும் விதத்தில் வித்தியாசமான முறையில் துண்டு பிரசுரங்களை அச்சடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருவார்.அதேபோல் இன்று புதுக்கோட்டை நகர பகுதிகளான பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது.

அதில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள தோரண வாய்க்கால்கள், குளங்கள் கழிவு நீர் செல்லும் சந்துகள் உள்ளிட்டவைகள் காணவில்லை காணாமல் போனதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என புதுக்கோட்டை நகர பகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் நடந்து செல்லும் பொதுமக்கள் நின்று படித்தும் சென்று வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News