சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

Update: 2021-09-17 12:45 GMT

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 62 வயது ராமச்சந்திரன்

புதுக்கோட்டையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர் ராமச்சந்திரனுக்கு ஆறு வருடகால கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை பாலன் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(62).  இவர் கடந்த 1.8.2019 -அன்று  தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராஜகுமார் என்பவரது மகளான 4 வயது சிறுமியை, ராமச்சந்திரன் தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

சிறுமி உடலில் ஆங்காங்கே காயம் இருந்ததைக் கண்ட அவரது பெற்றோர்கள் நடந்த விவரத்தை அறிந்து கொண்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, குற்றவாளி ராமச்சந்திரனுக்கு ஆறு வருடகால கடுங்காவல் தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News