ஒமைக்ரான் தொற்று வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி

திமுக எம்பி அப்துல்லாகு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்

Update: 2022-01-11 09:30 GMT

 ஒமைக்ரான் தொற்று உறுதியான மாநிலங்களவை எம்பி அப்துல்லா

 மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிற்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ க்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், திருச்சி காங்கிரஸ் கட்சி எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வீட்டினில் தனிமை படுத்தி க் கொண்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிற்கு நேற்று திடீரென உடல் வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிற்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் இரண்டு நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் மாநிலங்களவை திமுக எம்பி எம். எம். அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News