புதுக்கோட்டையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

திமுகவில் இளைஞர் அணியில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது

Update: 2022-03-26 06:22 GMT

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர்களை திமுகவின் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் திமுகவில் புதிதாக இளைஞர் அணியில் உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக   புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞர் அணியில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில், நகர கழக செயலாளர் க. நைனாமுகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் எம். எம் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளஞ்சேரன் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.இந்த முகாமில் புதுக்கோட்டை நகர பகுதிகளில் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News