பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு திருக்குறள் வழங்கிய திமுக நிர்வாகிகள்
மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் முக கவசம் கிருமி நாசினி மருந்து உள்ளிட்டவைகளை வழங்கி மாணவிகளை வரவேற்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர்.
புதுக்கோட்டை திமுக நகர செயலாளர் நைனா முகமது மற்றும் தொழிலதிபர் குமரேசன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் ,மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் முக கவசம் கிருமி நாசினி மருந்து உள்ளிட்டவைகளை வழங்கி மாணவிகளை வரவேற்றனர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கண்மணி சுப்பு ,விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.