புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்

இதில் சப் ஜூனியர் ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன

Update: 2022-03-12 11:45 GMT

புதுக்கோட்டை பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக போட்டி நடைபெற்றது இதில் சப் ஜூனியர் ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.டேக்வாண்டோ விளையாட்டுச் சங்கம் கௌரவ தலைவர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்

போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்று நிரூபித்தனர்.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்ற முதல் இடத்தை பிடித்தவர்கள் மாநில அளவில் நடக்கும் தேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Tags:    

Similar News