திண்டுக்கல் பெண் கொலை:புதுக்கோட்டையில் தனியார் விடுதிகளில் போலீஸார் சோதனை

திண்டுக்கல்லில் நடைபெற்ற கொலை வழக்கின் குற்றவாளிகள் தப்பித்து புதுக்கோட்டையில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பதாக தகவல்

Update: 2021-09-23 07:15 GMT

புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் ஆய்வை மேற்கொண்ட காவல்துறையினர்

திண்டுக்கல் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகள் புதுக்கோட்டையில் பதுங்கியிருக்கிறார்களா என்ற சந்தேகத்தின்பேரில்  காவல்துறையினர் தனியார் விடுதிகளில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்குறிப்பாக தனியார் விடுதிகளில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்கள் என்பது குறித்து வருகை பதிவேட்டில் எடுத்து ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பித்து புதுக்கோட்டையில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பதாக  கிடைத்த தகவலையடுத்து காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். காவல்துறை திடீரென தனியார் விடுதியில் ஆய்வு செய்தது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News