சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2021-07-23 14:15 GMT

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா மூன்றாவது அலை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதன்ஒரு பகுதியாக சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் மாரிமுத்து, செயலாளர் தங்கராஜ், பொருளாளர் செந்தில்வேல் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நைனா முகமது உள்ளிட்ட புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டைஅண்ணாசிலை சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனத்தில் சென்றவர்களுக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Tags:    

Similar News