தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-11-26 12:07 GMT

தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர் கவிதா ராமு.

தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்தது இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை முடிந்து நிலையில் மீண்டும் சென்னை வானிலை மையம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்திருந்தது.

அதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று தொடர்ந்து காலையிலிருந்து விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையினால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து பலர் வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் நாளை நவம்பர் 27ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News