தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

Update: 2021-11-25 12:57 GMT

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை முடிந்து மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது .

அதில் டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு பரவலாக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையிலிருந்து தொடர் மழை பெய்து கொண்டிருந்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்திருந்தார்.

தொடர்ந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நாளை நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News