சென்னை- காரைக்குடி இடையே மின் பாதையில் மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இனிமேல் இயக்கப்படும்

Update: 2022-02-25 11:45 GMT

மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் சென்னை-காரைக்குடி  இடையேயான பல்லவன் விரைவு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இன்று முதல் இயக்கப்படுகிறது.

திருச்சி - காரைக்குடி ரயில்வே பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்மயமாக்கல் பணிகளை கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பின்பு,  தற்போது மின்சார என்ஜின் மூலம் ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளார்.  எனவே, (பிப்.25) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும். இனி தொடர்ந்து, சென்னை - காரைக்குடி - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605/12606) சென்னை - காரைக்குடி இடையே இனிமேல் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News