புதுக்கோட்டையில் ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை: மக்கள் அதிர்ச்சி

பொங்கல் பானை வைக்கும்போது கரும்பு வைத்து வழிபடுவது வழக்கம்.

Update: 2022-01-14 09:00 GMT

புதுக்கோட்டை  திலகர்திடலில் விற்பனை செய்யப்பட்ட கரும்பு

புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகைக்கு  ஒரு கட்டு கரும்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது கரும்பு. பொங்கல் பானை வைக்கும்போது கரும்பு வைத்து  வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரிசி வாங்கும் ரேஷன் தாரர்களுக்கு பொங்கல் பரிசு கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டன.இந்நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று புதுக்கோட்டையில் செங்கரும்பு கிடைக்காமல் பொதுமக்கள் ஆங்காங்கே அலைந்து திரிந்தனர்.இந்தநிலையில் புதுக்கோட்டை திலகர் திடலில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த கரும்பு வியாபாரிகள் 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ 500 முதல் 800 வரை விற்பனை செய்தனர்

கரும்பு அதிக விலைக்கு விற்றாலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களுக்கு தேவையான கரும்புகளை வாங்கிச்சென்றனர்.ஒரு சிலர் கட்டுக்கட்டாக வாங்கச் சென்றாலும் பலர் தங்களுக்கு தேவையான இரண்டு கரும்புகள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News