வட்டாரவள மைய பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பு

மாவட்ட திட்ட அலுவலகங்கள் ,வட்டார மற்றும. தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்

Update: 2021-09-15 13:21 GMT

வட்டாரவள மைய பயிற்றுநராக பணிபுரிந்த 13 பேர் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையங்களில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் 13 பேர் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

2021-2022 ம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் ,வட்டார மற்றும. தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கு செல்ல பணிமாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மேற்பார்வையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.கலந்தாய்வில் பணி மூப்பு அடிப்படையில் மூத்த ஆசிரிய பயிற்றுநர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்விற்கு வருகை தந்த அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.. 

Tags:    

Similar News