புதுக்கோட்டையில் கருப்பு துணி கட்டி பிஜேபி மௌன போராட்டம்

திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-12-12 08:15 GMT

தமிழக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் வாயில் கருப்புத்துணி கடை மௌனப் போராட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர்

திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி புதுக்கோட்டையில் பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு யூடியூப் மாரிதாஸ் தனது முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறி அவரை கைது செய்தனர் நேற்று மேலும் ஒரு வழக்கு அவர் மீது போடப்பட்ட கைது செய்யப்பட்டார்.இந்நிலையில்,  தமிழக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறியும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு முயற்சி செய்வதை கண்டித்தும் வாயில் கருப்பு துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை பிச்சதான்பட்டி ரவுண்டானா அருகே திரண்ட பாஜகவினர், தங்களது வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மௌனமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News