அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்: எம்பி அப்துல்லாவிடம் மனு

புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகிகள் மனு அளித்தனர்

Update: 2021-09-17 15:30 GMT

புதுக்கோட்டையில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என.    மாநிலங்களவை எம்பி  அப்துல்லாவிடம் மனு அளித்த சங்க  நிர்வாகிகள்

புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகிகள் இன்று ரோஜா இல்லத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்  அப்துல்லாவிடம்,  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், புதுக்கோட்டை கீழராஜ வீதியில் குறுகிய சாலைகள் உள்ளதால் போக்குவரத்தினை சரி செய்வதற்காக மாற்று வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் .புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் மினி பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதேபோல், ரயில் நிலையத்தில்  கழிப்பிட வசதி குடிநீர், கேண்டின்  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.சிவக்குமார் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ், சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், நிர்வாகிகள் இப்ராகிம் பாபு, க.நைனாமுகமது  உள்பட பலர் உடனிருந்தனர்.

.

Tags:    

Similar News