புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2021-07-21 03:21 GMT

புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருக்கும் பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை செய்து கொண்டாடி வருவது வழக்கம்.

ஆனால், கடந்த வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு கூட்டு தொழுகைக்கு அனுமதி அளிக்காததால் பக்ரீத் மட்டும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் கொண்டாடாமல் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், இந்த வருடம் பக்ரீத் பண்டிகைக்கு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஈடுபடுவதற்கு தமிழக அரசு அனுமதியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்தக பள்ளிவாசலில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள்  தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்து அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

அதுமட்டுமல்லாமல் பக்ரீத் பண்டிகை முடிந்த உடன் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொள்வார்கள். ஆனால், தற்போது வைரஸ் தொற்று காரணமாக அது போன்ற நிகழ்வுகள் பள்ளிவாசல்களில் நடைபெறக் கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

Tags:    

Similar News