அண்ணா பிறந்தநாள்: புதுக்கோட்டையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் மரியாதை செய்தனர்

Update: 2021-09-15 09:29 GMT

புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள்  எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் நிர்வாகிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் ஊர்வலமாகச்சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News