நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 20-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

புதுக்கோட்டை நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் 20ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி மச்சுவாடி பகுதியில் நடைபெற்றது.

Update: 2021-07-21 10:15 GMT

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செய்த நிர்வாகிகள்

புதுக்கோட்டை நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் தலைவர் சுப்பையா தலைமையில் மறைந்த திரைப்பட நடிகர் செவாலியே சிவாஜி கணேசனின் 20வது நினைவுநாள் நிகழ்ச்சி மச்சுவாடி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் நைனாமுகமது, சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிவாஜிகணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஆர்ட்டிஸ்ட் ஆறுமுகம், பார்த்திபன், ரெங்கராஜ், ராதாகிருஷ்ணன், முருகேசன், சுந்தரம், யாசின், மூர்த்தி தட்டாம்பட்டி ஆறுமுகம், பிரபு, முகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News