சுயதொழில் முனைப்புடன் 70 வயது மூதாட்டி…! உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்

யார் தயவுமில்லாமல்பிழைக்க வழிகேட்ட 70 வயது மூதாட்டிக்கு ஆதரவுக்கரம் கொடுத்த புதுக்கோட்டை கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

Update: 2021-08-24 16:23 GMT

புதுக்கோட்டையில் 70 வயது மூதாட்டிக்கு அரசின் ஆதரவுக்கரம் கொடுத்த புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு

புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மீனா( 70 )  மூதாட்டி இரண்டு வாரங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புது குளக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள வரும்பொழுது, தனக்கு பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மூன்றாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்ப அட்டை தொலைந்து விட்டது.  வறுமையில் வாடும் எனக்கு உதவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் .

அதனை நிறைவேற்றும் விதமாக, இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,   புது குளக்கரையில் 70வயதான மூதாட்டி மீனாவிற்கு கடை நடத்த அனுமதியளித்தார். மேலும்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன குடும்ப அட்டைக்கு பதிலாக, புதிய குடும்ப அட்டையினையும்   நேரடியாகச் சென்று வழங்கி மூதாட்டியை வியப்பில் ஆழ்த்தினார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

Tags:    

Similar News