சிட்டி யூனியன் வங்கி சார்பில் அரசுமருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

Update: 2021-06-12 16:45 GMT

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் தன்னார்வலர்கள் மூலம் பலர் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகின்றனர்.

அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் செறிவூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர். அதன்படி இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ உபகரணங்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதியிடம் வழங்கினார்.

இதில் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News