வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்க அறிவிப்பு

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-08-23 11:05 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம் கோட்டம்) பஸ் (பைல் படம்)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (கும்பகோணம்) மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 28 -8- 2022 முதல் 9-9- 2022 வரை திண்டுக்கல், சென்னை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், ஓரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கும் அதே போன்று மேற்கண்ட ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் திரும்பச் செல்ல வேளாங்கண்ணியில் இருந்து 28 8 2022 முதல் 9/9/2022 வரை இரவு பகல் எந்நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும் மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். எனவே சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News