நாமக்கல்லில் நாளை சர்வதேச யோகா தின விழா

நாமக்கல்லில் நாளை சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்படவுள்ளது.

Update: 2023-06-20 03:00 GMT

சர்வதேச யோகா தின மாதிரி படம் 

நாமக்கல், ஜூன் 21-

நாமக்கல்லில் நாளை சர்வதேச யோகா தின விழா நடைபெறுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்படி, உலக நாடுகள் அனைத்திலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதே யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாமக்கல் உலக சமுதாய சேவா சங்கம், மனவளக்கலைமன்றம் சார்பில் சர்வதேச யோகா தின விழா நாளை 21 ம் தேதி மாலை 4.30 மணிக்கு நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். செங்கல்பட்டு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் டாக்டர் மணி முன்னிலை வகிக்கிறார்.


ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் உதயக்குமார் யோகா பயிற்சியை துவக்கி வைக்கிறார். நாமக்கல் மனவளக்கலைமன்ற தலைவர் ராமு வரவேற்கிறார். உலக சமுதாய சங்க விரிவாக்க இயக்குனர் உழவன் தங்கவேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகிறார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், நாமக்கல் மனவளக்கலைமன்ற துணைத்தலைவர் ரவீந்திரன், செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பேராசிரியர்கள், உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையான யோகா பயிற்சிகள் செய்து காண்பித்து விழிப்புணர்வு அளிக்க உள்ளனர்.

Tags:    

Similar News