நாமக்கல் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

Today Accident News in Tamil - நாமக்கல் அருகே லாரி மோதியாதல் மொபட்டில் சென்ற தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-07-02 02:15 GMT

பைல் படம்.

Today Accident News in Tamil -நாமக்கல் அருகே உள்ள வலையபட்டி பஞ்சாயத்து, குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63), கூலித்தொழிலாளி. இன்று இவர் தனது மொபட்டில் வலையபட்டியில் உள்ள மருந்து கடைக்கு, மருந்து வாங்க சென்று கொண்டிருந்தார். அவர் நாமக்கல்-திருச்சி மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி ஒன்று கிருஷ்ணமூர்த்தியின் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்எஸ்ஐ பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News