வளர்பிறை கருட பஞ்சமி திதி: ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

நாமக்கல், ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில், ஆவணி மாத வளர் பிறை கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

Update: 2023-08-22 05:30 GMT

வளர்பிரை கருட பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல், ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில், ஆவணி மாத வளர் பிறை கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்- சேந்தமங்கலம் ரோட்டில், ரயில் நிலையம் அருகில், அருள்மிகு ஸ்ரீ தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் வளர் பிறை பஞ்சமி திதி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன் படி நேற்று திங்கட்கிழமை (21-8-2023) வளர் பிறை கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், குங்குமம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பூஜைகளில் கலந்துகொண்டு, தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற, தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர் . பிறகு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் அர்ச்சகர், முத்தானந்தா சுவாமிகள் கூறியதாவது:

வாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி, வளர் பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். வாராஹி அம்மனை மனமுருகி வழிபாடு செய்தால் குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும். மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் கஷ்டங்கள், எதிரி தொல்லை, கடன் தொல்லை, பணப்பிரச்சினை உட்பட அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாகும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News