நாமக்கல்: இன்றும் நாளையும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும் நாளையும், சிறப்பு முகாம்களில், கொரேனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Update: 2021-10-21 03:15 GMT

கோப்பு படம்

இது குறித்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (21, 22 தேதிகள்), நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 40 முகாம்கள், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 50 முகாம்கள், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 50 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளளது.

முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு 84 நாட்கள் ஆன பொதுமக்கள் தொழிலாளர்கள், நெசவாளர்கள், லாரி டிரைவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த்தொற்று பரவல் முற்றிலும் நீங்கவில்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் உணர்ந்து,  அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News