நாமக்கல் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

நாமக்கல் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-17 10:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பழையபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (20). இவர் அதே பகுதியில் பாஸ்ட்புட் ஹோட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஸ்ரீராம்(20), எலுவம்பட்டியைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் (20) ஆகிய இருவரும் கடைக்கு வந்து உணவு கேட்டுள்ளனர். பிரகாஷ் கடையை மூடவேண்டியிருப்பதால் உணவு முடிந்து விட்டது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரகாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் எஸ்.ஐ சந்திரன் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீராம், வீரன் சுந்தரலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News